செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பஸ் மீது கல்வீசி தாக்கிய 20 பேர் கைது

Published On 2018-08-09 10:30 GMT   |   Update On 2018-08-09 10:30 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்கிய 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவான தகவல் நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டதும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதட்டம் நிலவியது. பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் பணிமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அப்போது சாலைகளில் வந்த பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டன. திருவண்ணாமலை டவுன், போளூர், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 16 அரசு பஸ் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பஸ்கள் மீது கல்வீசிய 20 பேர் கண்டுபிடிக்கபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News