செய்திகள்

மேலூரில் பிளஸ்-2 மாணவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2018-08-02 07:32 GMT   |   Update On 2018-08-02 07:32 GMT
மேலூர் அருகே பிளஸ்-2 மாணவரை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலூர்:

மேலூர் அருகே உள்ள முத்துவேல்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. விவசாய தொழிலாளி. இவருடைய மகன் எழிலரசன் (வயது 17). மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழிலரசன் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று அவர் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது 5 பேர் கும்பல் அங்கு வந்தது.

அந்த கும்பல் எழிலரசனை சுற்றி வளைத்து தாக்கியது. அரிவாளாலும் வெட்டிவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதில் காயம் அடைந்த எழிலரசன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதல் தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News