செய்திகள்

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? - ஜெயக்குமார் விளக்கம்

Published On 2018-08-03 08:49 GMT   |   Update On 2018-08-03 08:49 GMT
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். #Jayakumar #Idolsmuggling

சென்னை:

கிண்டியில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. குற்றத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் விசாரிப்பு உள்நாடு முதல் வெளிநாடு வரை தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.  #Jayakumar #Idolsmuggling

Tags:    

Similar News