செய்திகள்

நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2018-07-28 08:28 GMT   |   Update On 2018-07-28 08:28 GMT
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் லாரிகள் மூலம் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் அதிக அளவு மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் அதிவேகமாக செல்லும் இந்த லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி மோதி பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்த போதும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விளாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் சோழவந்தான் பள்ளப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது வேகமாக வந்த 2 டிப்பர் லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். அதில் வைகை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்திய மதுரை மாவட்டம் கணக்கன் குளத்தைச் சேர்ந்த இளையராஜா, எட்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News