செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கந்துவட்டி கேட்டு விவசாயியை மிரட்டியவர் கைது

Published On 2018-07-24 10:36 GMT   |   Update On 2018-07-24 10:36 GMT
ஆண்டிப்பட்டி அருகே கந்துவட்டி கேட்டு விவசாயியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். #arrestcase

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கீழமஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயத43). விவசாயி. இவர் தனது விவசாய பணிகளுக்காக கடந்த 2014-ம் ஆண்டு மேலமஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலாண்டி (78) என்பவரிடம் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் கடன் வாங்கினார். சில மாதங்கள் வட்டிகட்டி வந்தார். விவசாயம் கை கொடுக்காததால் அவரால் வாங்கிய தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.

சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டிற்கு வந்த வேலாண்டி தனது பணத்தை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினர். வட்டியுடன் சேர்த்து ரூ.4.96 லட்சம் பணம் தர மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்து பேசினார். இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலாண்டியை கைது செய்தனர். #arrestcase

Tags:    

Similar News