செய்திகள்

ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டத்தில் ஆட்டோ டிரைவர்- இளம்பெண் தற்கொலை

Published On 2018-07-21 14:09 GMT   |   Update On 2018-07-21 14:09 GMT
ஆரல்வாய்மொழி மற்றும் மார்த்தாண்டத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்தவர் குமார் (வயது 37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 18-ந்தேதி குமார் சவாரிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்தார். மனம் உடைந்து காணப்பட்ட குமார் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மார்த்தாண்டம் பாண்டார கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ராஜகனி(வயது30). இவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லை. பால்ராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

ராஜகனிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல்நலம் சரியாக வில்லை. இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜகனி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.      
Tags:    

Similar News