செய்திகள்

திருவாரூர் அருகே வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி

Published On 2018-07-10 11:37 GMT   |   Update On 2018-07-10 11:37 GMT
திருவாரூர் அருகே வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் காவல் சரகத்திற்கு உள்பட்ட சோழாச்சியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 55). கட்டிட தொழிலாளி.

சம்பவத்தன்று கல்யாண சுந்தரம் தனது தங்கை ரேனுகா வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் கல்யாண சுந்தரத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

இதுகுறித்து வடபாதி மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News