செய்திகள்

குன்றத்தூரில் வங்கி பெண் ஊழியரிடம் 12 பவுன் நகை பறிப்பு

Published On 2018-06-28 12:23 GMT   |   Update On 2018-06-28 12:23 GMT
குன்றத்தூரில் வங்கி பெண் ஊழியரிடம் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பூந்தமல்லி:

குன்றத்தூர் சரவணநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் லூகிஸ். வண்டலூர் - மீஞ்சூர்ரிங் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி டெய்சிராணி. குன்றத்தூரில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று இரவு மொபட்டில் கணவரின் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். வண்டலூர்- மீஞ்சூர்ரிங் சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் டெய்சி ராணியை வழிமறித்து அவரை மிரட்டி 12 பவுன் தாலி செயினை பறித்து விட்டு தப்பினர்.

இதுகுறித்து அவர் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News