search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel flush"

    தெப்பக்குளம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை மேல அனுப்பானடி நாகம்மாள் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்தவர் அரிகரன் (வயது 33). இவர் நேற்று இரவு மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கேட்லாக் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்ற போது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

    அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அரிகரனின் மனைவி கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அரிகரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை விரட்டிச் சென்றார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    இது குறித்து தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதில், 7 பவுன் நகையினை பறித்துச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரும்பாக்கத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்த 2 வாலிபர்கள், கார்-மோட்டார் சைக்கிளில் சென்று அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
    போரூர்:

    அரும்பாக்கம், அண்ணா நகர், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன.

    கொள்ளையர்களை பிடிக்க அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் குணசேகர், இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ஜெகதீசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    அவர்கள் நகைபறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சுற்றும் ஒரே வாலிபர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கொள்ளையர்களின் உருவ படத்தை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் நடந்து சென்ற ஒரு வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் விரட்டி பிடித்தனர்.

    அவர்கள் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சபி பாஷா, அண்ணாநகரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அண்ணாநகர், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர்.

    போலீசாரிடம் அவர்கள் கூறும் போது, “மோட்டார் சைக்கிளில் வந்து செயினை பறித்தவுடன் உடனடியாக சற்று தூரத்தில் காரில் காத்திருக்கும் கூட்டாளிகளிடம் அதை கொடுத்துவிட்டு தப்பி சென்றுவிடுவோம். பின்னர் அவர்களிடம் பணம் பெறுவோம். கார், மோட்டார் சைக்கிளில் சுற்றி நோட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்தோம்” என்றனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின்படி கூட்டாளியான பெரம்பூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமாரை கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் இருந்து 40 பவுன் நகை, கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை மாவட்டத்தில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சினிமா துணை நடிகர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை நகரில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்ஊத்துக்குழியை சேர்ந்த சீனிவாசன்(வயது 35) என்பவர் சிக்கினார். இவர் ஆர்.எஸ்.புரத்தில் 2 பேர், போத்தனூர், சிங்காநல்லூரில் ஒருவர் என 4 பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து, 15 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    இவர் மதுக்கரை பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் நகைபறித்து வந்துள்ளார். இவரது நண்பர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரிலேயே சீனிவாசனை கைது செய்துள்ளனர். நகை பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    இவர் பொள்ளாச்சி பகுதியில் எடுக்கப்பட்ட கொடி உள்ளிட்ட சில சினிமாக்களில் சிறு, சிறு காட்சிகளில் நடித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே சிங்காநல்லூர் போலீசில் ஒரு வழக்கு உள்ளது.

    இவரது மனைவி சூர்யா பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று பூமார்க்கெட்டில் இருந்து சுந்தராபுரம் சென்ற பஸ்சில் ஒரு பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த போது பயணிகள் சூர்யாவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
    திருச்செந்தூரில் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சுகுமார். இவர் திருச்செந்தூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சுகுமாரின் மனைவி பிரேமா (வயது 58). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

    மகன் வானுமாமலை பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வானுமாமலையின் இரண்டாவது மகளான 1½ வயது குழந்தை சுகஸ்னா அழுது கொண்டிருந்தாள். இதையடுத்து பாட்டி பிரேமா தனது பேத்தியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தார்.

    அவ்வழியாக சென்ற திருச்செந்தூர் பயணிகள் ரெயிலை பேத்திக்கு காண்பித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிரேமாவை கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 15பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்குள்ள காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடிவிட்டான்.

    பிரேமாவிடம் இருந்த பறித்து சென்ற நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். தன்னிடம் மர்ம நபர் நகை பறித்தது குறித்து பிரேமா திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    கோவை அருகே பெண்ணை கீழே தள்ளி நகை பறித்தவர்கள் குறித்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் தேடி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சத்திய வள்ளி (52). இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த ஒருவன் வண்டியில் இருந்து கீழே இறங்கி சத்திய வள்ளியிடம் வழி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டான்.

    இது குறித்து சத்திய வள்ளி சிங்காநல்லூர் போலீசில் நேற்று மாலை புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சத்திய வள்ளியிடம் நகை பறித்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா உள்ளது. அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வருவதும், அதில் பின்னால் உட்கார்ந்து இருந்தவன் கீழே இறங்கி சத்திய வள்ளியிடம் வழி கேட்பது போல் நடித்து நகையை பறிக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது. நகை பறிப்பதை சத்திய வள்ளி தடுத்து போராடுகிறார். அவரை கீழே தள்ளி விட்டு நகையை பறித்து செல்லும் காட்சியும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறது.

    இந்த காட்சிகளை வைத்து நகையை பறித்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அம்மாபேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் நகை கொள்ளையடிக்க சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே சூழியக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜன். இவரது மனைவி மல்லிகா (வயது 55).

    நேற்று இரவு மல்லிகா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் 2 மர்ம நபர்கள் மல்லிகா வீட்டில் நுழைந்தனர். பின்னர் மல்லிகாவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 பவுன் நகை, 600 கிராம் வெள்ளி ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து மல்லிகா அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சூழியக்கோட்டை கீழத்தெருவைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி அமுதா (வயது 53). இவர் கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த 2 பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவை திருட்டு போயிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூழியக்கோட்டை பகுதியில் தொடர்ந்து திருட்டு- நகைப்பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.
    குன்றத்தூரில் வங்கி பெண் ஊழியரிடம் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    பூந்தமல்லி:

    குன்றத்தூர் சரவணநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் லூகிஸ். வண்டலூர் - மீஞ்சூர்ரிங் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி டெய்சிராணி. குன்றத்தூரில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று இரவு மொபட்டில் கணவரின் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். வண்டலூர்- மீஞ்சூர்ரிங் சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் டெய்சி ராணியை வழிமறித்து அவரை மிரட்டி 12 பவுன் தாலி செயினை பறித்து விட்டு தப்பினர்.

    இதுகுறித்து அவர் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    ஆந்திராவில் நகை பறித்த சென்னை வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    திருப்பதி, விநாயகர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர், வியாபாரி. இவரது மனைவி அனுராதா. இருவரும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர எல்லையான புதுக்குப்பம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 15 பேர் கும்பல் திடீரென பாஸ்கரையும், அனுராதாவையும் வழி மறித்தனர். அவர்கள் அனுராதா அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து தப்பினர்.

    பின்னர் கொள்ளை கும்பல் சத்யவேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது என்.எம்.கண்டிகையில் மொபட்டில் வந்த ஆசிரியர் ஜெயஸ்ரீ என்பவரையும் வழிமறித்து 6 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    இதற்கிடையே நகையை பறிகொடுத்த பாஸ்கரும், அனுராதாவும் கொள்ளை கும்பல் குறித்து சத்யவேட்டில் திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சத்யவேட்டில் திரண்டனர். அந்த நேரத்தில் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 7 பேரை மடக்கி பிடித்தனர். 8 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 7 பேரையும் பொது மக்கள் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் களை சத்யவேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் செங்குன்றம் கிராண்ட்லைன் பகுதியை சேர்ந்த ராஜி (24) மற்றும் ஆந்திராவை சேர்ந்த அவரது கூட்டாளிகள் என்பது தெரிந்தது.

    பொது மக்கள் தாக்கியதில் ராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜி பரிதாபமாக இறந்தார். பிடிப்டட மற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடியவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
    ×