என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு
Byமாலை மலர்23 Aug 2018 11:42 AM GMT (Updated: 23 Aug 2018 11:42 AM GMT)
கோவை அருகே பெண்ணை கீழே தள்ளி நகை பறித்தவர்கள் குறித்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சத்திய வள்ளி (52). இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த ஒருவன் வண்டியில் இருந்து கீழே இறங்கி சத்திய வள்ளியிடம் வழி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டான்.
இது குறித்து சத்திய வள்ளி சிங்காநல்லூர் போலீசில் நேற்று மாலை புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சத்திய வள்ளியிடம் நகை பறித்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா உள்ளது. அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வருவதும், அதில் பின்னால் உட்கார்ந்து இருந்தவன் கீழே இறங்கி சத்திய வள்ளியிடம் வழி கேட்பது போல் நடித்து நகையை பறிக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது. நகை பறிப்பதை சத்திய வள்ளி தடுத்து போராடுகிறார். அவரை கீழே தள்ளி விட்டு நகையை பறித்து செல்லும் காட்சியும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறது.
இந்த காட்சிகளை வைத்து நகையை பறித்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சத்திய வள்ளி (52). இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த ஒருவன் வண்டியில் இருந்து கீழே இறங்கி சத்திய வள்ளியிடம் வழி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டான்.
இது குறித்து சத்திய வள்ளி சிங்காநல்லூர் போலீசில் நேற்று மாலை புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சத்திய வள்ளியிடம் நகை பறித்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா உள்ளது. அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வருவதும், அதில் பின்னால் உட்கார்ந்து இருந்தவன் கீழே இறங்கி சத்திய வள்ளியிடம் வழி கேட்பது போல் நடித்து நகையை பறிக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது. நகை பறிப்பதை சத்திய வள்ளி தடுத்து போராடுகிறார். அவரை கீழே தள்ளி விட்டு நகையை பறித்து செல்லும் காட்சியும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறது.
இந்த காட்சிகளை வைத்து நகையை பறித்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X