செய்திகள்

வளசரவாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

Published On 2018-06-19 06:59 GMT   |   Update On 2018-06-19 06:59 GMT
வளசரவாக்கம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வளசரவாக்கம் அருகே ஆர்காடு சாலையில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பொருட்காட்சி நிறைவடைந்தது. இதையடுத்து அங்கிருந்த பொருட்களை லாரிகள் மூலம் வேறு இடத்திற்கு எடுத்து செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று மினி லாரியில் பொருட்களை ஏற்றி வைத்திருந்தனர். இரவு 1மணி அளவில் லாரியை டிரைவர் சிவசந்திரன் பின்னோக்கி எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு படுத்து தூங்கி கொண்டிருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான நடராஜ் (50) என்பவர் மீது ஏறி இறங்கியது.

இதில் நடராஜ் படுகாய மடைந்தார் உடனடியாக நடராஜை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

வளசரவாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் சிவசந்திரனை (28) கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகின்றது. #tamilnews

Tags:    

Similar News