செய்திகள்

ராஜபாளையத்தில் தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை

Published On 2018-06-12 09:14 GMT   |   Update On 2018-06-12 09:14 GMT
ராஜபாளையத்தில் தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் சத்திரப் பட்டி சாலையில் உள்ள வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது40), டெய்லர். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

அதன் பிறகு பேச்சியம் மாள் என்பவருடன் சந்திர சேகர் வசித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்ற அவர் இரவில் வீடு திரும்ப வில்லை.

இதனால் பேச்சியம்மாள் அவரை தேடி கடைக்கு சென் றார். அங்கு கடைக்குள் சந்திரசேகர் தூக்கில் தொங் கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ராஜபாளை யம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News