செய்திகள்
அரூரில் மனு கொடுக்க வந்த 25 விவசாயிகள் கைது
தருமபுரியில் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக புறப்பட்ட 25 விவசாயிகளை வழியிலேயே போலீசார் கைது செய்தனர்.
அரூர்:
சேலம்-சென்னை வரை 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்க தருமபுரி மாவட்டத்தில் 10 கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதனை கண்டித்து 10 கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஒன்று திரண்டு இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க புறப்பட்டனர்.
இதற்காக கடத்தூர், அரூர், தீர்த்தமலை, சாமியாபுரம், மொரப்பூர், ஒடசல்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, கடத்தூர்-தருமபுரி மெயின்ரோடு ஆகிய 8 இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு புறப்பட்டு வந்தனர். அவர்களை ஆங்காங்கே நின்று கொண்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
அரூரில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
சேலம்-சென்னை வரை 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்க தருமபுரி மாவட்டத்தில் 10 கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதனை கண்டித்து 10 கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஒன்று திரண்டு இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க புறப்பட்டனர்.
இதற்காக கடத்தூர், அரூர், தீர்த்தமலை, சாமியாபுரம், மொரப்பூர், ஒடசல்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, கடத்தூர்-தருமபுரி மெயின்ரோடு ஆகிய 8 இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு புறப்பட்டு வந்தனர். அவர்களை ஆங்காங்கே நின்று கொண்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
அரூரில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.