செய்திகள்
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற நாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த்
அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதன்முதலாக பொது களத்தில் இறங்கும் விதமாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதுக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்ல உள்ளார். #Rajinikanth #Thoothukudi
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியை இன்னும் தொடங்கவில்லை என்றாலும் அதற்கான ஆரம்ப கட்ட பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற நாளை ரஜினிகாந்த் தூத்துக்குடி செல்ல உள்ளார். காலை விமானத்தில் அங்கு செல்லும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.