செய்திகள்

கும்பகோணம் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 3 பேர் கைது

Published On 2018-05-21 16:32 GMT   |   Update On 2018-05-21 16:32 GMT
திருச்சியில் நேற்று முன்தினம் ம.தி.முக. மற்றும் நாம் தமிழர்கள் கட்சியினர் மோதிக் கொண்டனர். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம்:

திருச்சியில் நேற்று முன்தினம் ம.தி.முக. மற்றும் நாம் தமிழர்கள் கட்சியினர் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், பிரதாப் ஆகிய 2 பேரையும் பந்தநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர். 

இதேபோல் கும்பகோணம் தாலுகாவை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய இளைஞர் பாசறை துணை தலைவர் தினேஷ் பாபுவையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News