செய்திகள்
திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் - பழனி ரோடு பெங்காளி தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் அழகர்சாமி (வயது 27). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வள்ளிமலர் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 மாத கைக்குழந்தை உள்ளது.
கணவன்-மனைவியிடைய கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு குடிபோதையில் வந்த கணவரை மனைவி கண்டித்துள்ளார்.
அதன் பிறகு மனைவி தூங்க சென்று விட்டார். இன்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மின் விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் அழகர்சாமி பிணமாக தொங்கினார். இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.