செய்திகள்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் ஆஜர்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீகோபால் இன்று ஆஜரானார். #Jayalalithaa #ApolloHospital
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், உறவினர்கள், சசிகலா உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதனை ஏற்று டாக்டர் ஜெயஸ்ரீகோபால் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். அவரை தொடர்ந்து டாக்டர் சாந்தா ராம் நாளை (புதன்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். #Jayalalithaa #ApolloHospital
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், உறவினர்கள், சசிகலா உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதனை ஏற்று டாக்டர் ஜெயஸ்ரீகோபால் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். அவரை தொடர்ந்து டாக்டர் சாந்தா ராம் நாளை (புதன்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். #Jayalalithaa #ApolloHospital