செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உருவபொம்மையை தி.மு.க.வினர் எரித்து போராட்டம் நடத்திய காட்சி.

முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்- 36 பேர் மீது வழக்குபதிவு

Published On 2018-05-03 10:09 GMT   |   Update On 2018-05-03 10:09 GMT
திருவாரூர் அருகே முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 36 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், தென்னவராய நல்லூரில் மாங்குடி ஊழவர் கூட்டுறவு சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மனுக்கள் பரிசீலனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மனுக்கள் பரிசீலனை நடைபெறவில்லை.

இதுபற்றி அறிந்த தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் தேவா தலைமையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய புகாரின் பேரில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் போராட்டத்தில் ஈடுப்பட்ட தேவா உள்பட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றார்.

Tags:    

Similar News