செய்திகள்

வெள்ளகோவில் அருகே பிளஸ்- 2 மாணவி தீக்குளித்து தற்கொலை

Published On 2018-04-30 12:00 GMT   |   Update On 2018-04-30 12:00 GMT
வெள்ளகோவில் அருகே விரும்பிய ஊரில் படிக்க முடியாததால் பிளஸ்- 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள செல்வகுமார கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் ராகவி (18). பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார்.

இவருக்கு 2 வயது இருந்த போது தாய் இறந்து விட்டார். தந்தை பால்ராஜூம் வேறு திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து ராகவி தனது பெரியப்பா சேகர் பாதுகாப்பில் இருந்து படித்து வந்தார்.

அவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் ஹாஸ்டலில் தங்கி படிக்க விரும்புவதாக தனது பெரியப்பா சேகரிடம் கூறினார்.அதற்கு அவர் தன்னால் அதிக செலவு செய்ய முடியாது. தேர்வு முடிவு வரட்டும் பார்த்து கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது.

இதனால் மன வேதனை அடைந்த ராகவி வீட்டின் கதவை பூட்டி கொண்டு தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News