செய்திகள்
பழனி அருகே ஓடையில் மணல் அள்ளிய 2 டிராக்டர் பறிமுதல்
பழனி அருகே ஓடையில் மணல் அள்ளிய 2 டிராக்டர் பறிமுதல்
பழனி:
பழனி அருகே பாப்பம்பட்டியில் புதுக்குளம் கெசத்து ஓடை அமைந்துள்ளது. நள்ளிரவு வேளையில் இங்கு வந்து சிலர் டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளிச்செல்வதாக தாசில்தார் சரவணக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஓடையில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு வந்த 2 டிராக்டர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டரை ஓட்டி வந்தவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதையடுத்து 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தினர். மேலும் டிராக்டர்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.