மோடியின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் நடக்கிறது- தமிழிசை
பூந்தமல்லி:
போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை கவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து. எங்களது கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பத்திரிகை நிருபர்களை தவறாக சித்தரிப்பது தவறு. அதனை நீக்கச் சொல்லி வருகிறோம். யாரையும் சிறுமை படுத்தும் நோக்கம் எங்களுக்கு கிடையாது.
குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகளை மூட வேண்டும் என்ற செய்தி கவலையை தருகிறது. அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவர்களை சேர்க்க வேண்டும்.
பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டம் நன்மை தரும் திட்டங்களாக உள்ளது. பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. அது எடுபடாமல் போய்விடும். சட்டரீதியாக நமக்கு காவிரி நீர் கிடைக்க போகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #tamilisai #pmmodi