செய்திகள்

திருச்செங்கோட்டில் 20-ந்தேதி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

Published On 2018-04-18 13:37 GMT   |   Update On 2018-04-18 13:37 GMT
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 20-ந்தேதி திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறுகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.செயற்குழு கூட்டம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்திற்கு அவை தலைவர் ஆர்.நடனசபாபதி தலைமை தாங்குகிறார். இதில் கட்சி நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News