செய்திகள்
போடி அருகே கரட்டு பகுதியில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்
போடி அருகே கரட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே உள்ள கழுகுமலை அடிவாரம் கரட்டுப்பகுதியில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள் இதைப்பார்த்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கூறியதின் பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவர் இறந்து பல நாட்கள் ஆன நிலையில் இருந்ததால் முகம் மற்றும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவருக்கு வயது சுமார் 40 இருக்கும்.
இறந்தவர் கொலை செய்யப்பட்டரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. போடி அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.