செய்திகள்

போடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

Published On 2018-04-18 11:39 GMT   |   Update On 2018-04-18 11:39 GMT
போடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

போடி ராசிங்காபுரம் பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது52). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் அறையின் உள்ளே சென்று பதட்டத்துடன் பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை கொள்ளைபோயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கொள்ளை சம்பவம் குறித்து பாலசுப்பிரமணி போடி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News