செய்திகள்

உசிலம்பட்டியில் 2 வீடுகளில் பதுக்கிய 150 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது

Published On 2018-04-17 11:36 GMT   |   Update On 2018-04-17 11:36 GMT
உசிலம்பட்டியில் 2 வீடுகளில் பதுக்கிய 150 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியில் சில வீடுகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் சண்முகப் பாண்டியன் போலீஸ்காரர்கள் செல்வகுமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கீரிப்பட்டி சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பெரிய கருப்பன் மகன் பங்காரு என்ற சிவா (வயது 23), இவாஸ் ஆகியோரது வீடுகளில் கஞ்சா பதுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து சுமார் 150 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா பதுக்கிய சிவா கைது செய்யப்பட்டார். இவாஸ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News