செய்திகள்

திருமக்கோட்டை அருகே திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2018-04-14 16:54 GMT   |   Update On 2018-04-14 16:54 GMT
திருமக்கோட்டை அருகே கணவர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுகன்யா (வயது 26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 10 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமான முதல் மாதத்திலேயே முருகையன் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். இதனால் சுகன்யா தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை சுகன்யா தனது மாமனார் வீட்டுக்கு வந்தார். பிறகு இரவில் திடீரென அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறிய சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுகன்யா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி திருமக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் சுகன்யாவுக்கு திருமணமாகி 10 மாதமே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ. செல்வசுரபி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News