செய்திகள்

காலாப்பட்டில் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி

Published On 2018-04-13 13:34 GMT   |   Update On 2018-04-13 13:34 GMT
காலாப்பட்டில் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி இறந்து போனார்.

புதுச்சேரி:

புதுவை சின்ன காலாப்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு புதுவை வந்து விட்டு பின்னர் மொபட்டில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

சின்ன காலாப்பட்டு பல் கலைக்கழக நுழைவாயில் அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஓட்டி வந்த மொபட் மீது அதிவேகமாக மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News