search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike motorcycle accident"

    கவுந்தப்பாடி அருகே மோட்டார் சைக்கிளும் மொபட்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோட்டில் இருந்து அலுமினிய பீடிங் வேலை செய்யும் நாகராஜ் (வயது 50) என்பவர் சரத்குமார் (22) என்பவருடன் மொபட்டில் ஆப்பக்கூடலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    மொபட்டை நாகராஜ் ஓட்டினார். கவுந்தப்பாடி அருகே வளையக்காரபாளையம் குட்டை பக்கம் வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும், நாகராஜ் ஓட்டி வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வளையக்கார பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (35), நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சரத்குமாருக்கு கால் முறிந்தது. ராமச்சந்திரனின் மகன் அருணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சை பலனின்றி நாகராஜ், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கவுந்தப்பாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    ×