செய்திகள்
தேனி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை
தேனி அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 43). முன்னாள் ராணுவ வீரர். தற்போது விவசாயம் பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தாருடன் சின்னமனூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்காக வீட்டை பூட்டிச் சென்றார். இரவு வந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து செல்வம் ஓடைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.