செய்திகள்

குன்னம் அருகே அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2018-04-12 12:53 GMT   |   Update On 2018-04-12 12:53 GMT
குன்னம் அருகே அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
குன்னம்:

அரியலூர் பார்பன சேரியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58) கூலி தொழிலாளி. இவரது பேத்தி தனுசியா (15). பள்ளி மாணவி.  இன்று காலை சுப்பிரமணி தனது பேத்தியுடன் மோட்டார் சைக்கிளில் அரியலூரில் இருந்து பெரம்பலூருக்கு சென்றார். 

குன்னம் தாலுகா அலுவலகம் அருகே சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். தனுசியா படுகாயம் அடைந்தார். 

இது குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News