செய்திகள்

அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்

Published On 2018-04-10 07:00 GMT   |   Update On 2018-04-10 07:00 GMT
அம்பேத்கரின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேடு நூறடிச் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
சென்னை:

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அம்பேத்கரின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு (புதிய மத்திய பேருந்து நிலையம் அருகில்) நூறடிச் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

அப்போது சென்னை வடக்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைச் செயற் குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக- வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக் குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News