செய்திகள்

பெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

Published On 2018-04-09 13:41 GMT   |   Update On 2018-04-09 13:41 GMT
பெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள செட்டிக்குளம் மாவலிங்கை பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பூபதி (வயது 5), முருகேசன் மகன் பாரதி (5). அங்குள்ள பள்ளியில் 1-ம்வகுப்பு படித்து வந்தனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அங்குள்ள வயல் பகுதியில் டயரை ஓட்டி  விளையாடி கொண்டிருந்தனர். அப்போது தரையையொட்டிய கிணற்றுக்குள் டயர் விழுந்தது. 

அதை எடுப்பதற்காக முயன்ற போது  2பேரும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இதனால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காப்பாற்ற முயன்றனர். அதற்குள் 2பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.    

இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள்  சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில்  மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News