என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிணற்றில் மூழ்கி பலி"
- சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி கிணற்றில் மூழ்கி பலியானார்.
- இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எட்டக்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 31). இவர் வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று மடத்துப்பட்டிக்கு சென்றிருந்த சுரேஷ்குமார் அங்கு சலூன் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சாப்பாடு வாங்கி வருவதாக கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் சுரேஷ்குமாரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் பலன் இல்லை.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே தனியார் தோட்டத்து கிணற்று பகுதியில் சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள், சட்டை, செல்போன் ஆகியவை கிடந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிப் பார்த்தனர். அப்போது சுரேஷ்குமாரின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
சலூன் கடைக்கு சென்ற சுரேஷ்குமார் அங்கு முடிவெட்டிய பின் கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்