செய்திகள்

அமைச்சரின் உதவியாளருக்கு அரிவாள் வெட்டு - டி.டி.வி அணியினர் காரணம் என புகார்

Published On 2018-04-08 02:29 GMT   |   Update On 2018-04-08 02:29 GMT
மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உதவியாளர் மதனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியதாக டி.டி.வி தினகரன் ஆதரவாளர் சரவணச் செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உதவியாளர் மதனை வீடு புகுந்து அரிவாளால் சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் டி.டி.வி தினகரன் ஆதரவாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியுமான சரவணச் செல்வன் என்பவரை கைது செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. #TamilNews
Tags:    

Similar News