செய்திகள்

தேனி அருகே கடன் பிரச்சினையில் பெண் மீது தாக்குதல்

Published On 2018-04-06 11:19 GMT   |   Update On 2018-04-06 11:19 GMT
தேனி அருகே கடன் பிரச்சினையில் பெண் தாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே நாராயணபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சென்றாயன் மனைவி முத்துலட்சுமி(வயது45). இவரது உறவினர் அதேபகுதியை சேர்ந்த தேவி. இவரது தந்தைக்கு முத்துலட்சுமி ரூ.3ஆயிரம் கடன் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை தேவியிடம் திருப்பிதருமாறு கேட்டுள்ளார். இதற்கு தேவி மறுப்பு தெரிவித்து அவரது சகோதரர் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து முத்துலட்சுமியை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News