செய்திகள்

நாமக்கல் அருகே விஷம் குடித்த எலக்ட்ரீசியன் மரணம்

Published On 2018-04-04 12:32 GMT   |   Update On 2018-04-04 12:32 GMT
நாமக்கல் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள சின்னமுதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 40). எலெக்ட்ரீசியன். இவருக்கு காயத்தி என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். வினோத்குமார் நாமக்கல் கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு பட்டறையில் லாரிகளுக்கு எலெக்ட்ரிக்கல் வயரிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். 

இந்த நிலையில் இவர் பல்வேறு இடங்களில் இருந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் தொடர்ந்து அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்தது. இதில் மனம் உடைந்த வினோத்குமார் கடந்த 2-ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வினோத்குமார் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
Tags:    

Similar News