செய்திகள்

செங்கம் அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

Published On 2018-04-04 12:14 GMT   |   Update On 2018-04-04 12:14 GMT
செங்கம் அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கம்:

செங்கம் அடுத்த முத்தானூரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ஏழுமலை (வயது 32). நேற்று இரவு ஏழுமலை தனது உறவினர்கள் சின்னசாமி (70), இந்திராணி (58), அம்மாபாளையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அம்மாபாளையம் அருகே சென்ற போது லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாய்ச்சல் போலீசார் காயமடைந்த 3 பேரையும் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.மேலும் 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News