தர்மபுரியில் ஆசிரியையிடம் 10 பவுன் செயின் பறிப்பு
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சுகுணா(வயது 44). இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர், தனது உறவினர் ஒருவருடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு தர்மபுரியில் உள்ள சாலை விநாயகர் ரோட்டில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகுணா, அதன் பிறகு திருமண மண்டபம் அருகே உள்ள கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள், பள்ளி ஆசிரியை சுகுணா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.