காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தஞ்சையில் நாளை தினகரன் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தஞ்சை திலகர் திடலில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் கழகத்தில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.
மூத்த நிர்வாகி துரை.கோவிந்தராஜன், தங்கத் தமிழ்ச் செல்வன், செந்தில் பாலாஜி, வெற்றி வேல், பழனியப்பன், மாரியப்பன், கென்னடி, தங்க துரை, பிரபு கலைச் செல்வன், உமாமகேஷ்வரி மற்றும் விவசாய சங்கங் பிரதிநிதிகள் உள்ளிட் டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள். முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில சார்பு அணி செயலாளர்கள், மாவட்ட பிரிவு செயலாளர்கள் மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு பங்கேற்க வடக்கு மாவட்ட செயலாளர் ரங்கசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.