செய்திகள்

சங்கரன்கோவில் அருகே தூக்குபோட்டு டிரைவர் தற்கொலை

Published On 2018-03-23 14:15 GMT   |   Update On 2018-03-23 14:15 GMT
சங்கரன்கோவில் அருகே லாரி டிரைவர் புளியமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம் சொக்கலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் பத்ரகாளி (34). இவரின் மனைவி ராஜேஸ்வரி (31). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளான். பத்ரகாளி கேரளாவில் லாரி டிரைவாக வேலை செய்து வருகிறார். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வருவது வழக்கம். 

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்காக கேராளவிற்கு சென்று விட்டார். அங்கிருந்து 21-ந் தேதி சொந்த ஊருக்கு வருதாக கூறி விட்டு கிளம்பி வந்துள்ளார். ஆனால் ஊருக்கு வந்து சேரவில்லை. நேற்று காலை ஆயாள்பட்டி விலக்கில் உள்ள புளியமரத்தில் கயிறால் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு வந்த பனவடலிசத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News