செய்திகள்

வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் கைது

Published On 2018-03-23 10:14 GMT   |   Update On 2018-03-23 10:14 GMT
வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே பொறையூர் பகுதியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின் பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் பொறையூர் பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.

அப்போது அங்குள்ள பள்ளி அருகே 2 வாலிபர்கள் நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தனர். அந்த 2 வாலிபர்களையும் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 10 கிராம் கொண்ட 27 கஞ்சா பொட்டலங்களையும் மற்றும் போதை புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த விபக்ஹர்வின் (வயது32) மற்றும் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த விக்வோகா (25) என்பதும் இவர்கள் பொறையாரில் தங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து கொண்டே மாணவர்களுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News