செய்திகள்
மன்னார்குடி கோவில் திருவிழாவில் 2 பெண்களிடம் 24 பவுன் நகை பறிப்பு
மன்னார்குடி கோவில் திருவிழாவில் 2 பெண்களிடம் 24 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி உடையார் தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி கற்பகம் (வயது 57). இவர் நேற்று மன்னார்குடி ராஜகோபால சாமி கோவில் திருவிழாவையொட்டி நடந்த வெண்ணைத்தாழி உற்சவத்தை காண சென்றார்.
அவர் கூட்டத்தில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்த போது மர்ம நபர் அவர் அணிந்திருந்த 17 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டான்.
இதேபோல் மன்னார்குடி அருகே உள்ள அசேஷம் பகுதியை சேர்ந்த சந்திரா (50) என்பவர் நேற்று மன்னார்குடி நடந்த வெண்ணைத்தாழி உற்சவத்தில் கலந்து கொண்டார். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையையும் மர்ம நபர் பறித்து சென்றுவிட்டான்.
இதுபற்றி நகையை பறிகொடுத்த கற்பகம், சந்திரா ஆகிய இருவரும் மன்னார்குடி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.