செய்திகள்

மதுரை அருகே இளம்பெண் கடத்தல்

Published On 2018-03-23 09:33 GMT   |   Update On 2018-03-23 09:33 GMT
மதுரை அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை செக்கானூரணி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஏ.கொக்குளத்தைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது மகள் தமிழ்ச்செல்வி (வயது 22).

இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காசி விஸ்வநாதன், மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து காசி விஸ்வநாதன் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். அதில், சம்பவத்தன்று எனது மகள் தமிழ்ச்செல்வியை சிவகங்கை மாவட்டம், பெரியகன்னூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடத்திச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News