செய்திகள்

மணல் குவாரிகளுக்கு நாளை டெண்டர் கோரப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Published On 2018-03-21 08:40 GMT   |   Update On 2018-03-21 08:40 GMT
மணல் குவாரிகள் தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய குவாரிகள் திறக்க நாளை டெண்டர் கோரப்பட உள்ளது என்றார். #TNAssembly #EdappadiPalinisamy

சென்னை:

மணல் குவாரிகள் தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய குவாரிகள் திறக்க நாளை டெண்டர் கோரப்பட உள்ளது என்றார்.

மணல் குவாரிகள் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி அரசு மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-

பொதுநல வழக்குகளால் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய மணல் குவாரிகளை திறக்க நாளை டெண்டர் கோரப்பட உள்ளது. புதிய மணல் குவாரிகள் திறந்து தட்டுப்பாடு இல்லாமல் மணல் விற்பனை செய்யப்படும். வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்து ஆன்லைனில் அரசே விற்பனை செய்யும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் கலப்படம் செய்யப்பட்ட மணலா என்றெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னரே மக்களுக்கு விற்பனை செய்யப்படும். 

இவ்வாறு முதல்வர் பதிலளித்தார். #TNAssembly #EdappadiPalinisamy #tamilnews
Tags:    

Similar News