செய்திகள்

மதுப்பழக்கத்துக்கு அடிமையான சிறுவன் வி‌ஷம் குடித்து பலி

Published On 2018-03-21 06:29 GMT   |   Update On 2018-03-21 06:29 GMT
ஊத்துக்கோட்டை அருகே மதுப்பழக்கத்துக்கு அடிமையான சிறுவனை தாய் கண்டித்ததால் அவர் விஷம் குடித்து பலியானார்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையை அடுத்த பாலவாக்கம் அருகே உள்ள சீனிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு . இவர் செங்கரையில் உள்ள காட்டுச்செல்லி அம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

இவரது மகன் சூர்யா (வயது 15). ஆறாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சூர்யாவுக்கு குடிபழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி மது குடித்து வந்த அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று சூர்யா மது அருந்தி வீட்டிற்கு வந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார்.

இதனால் மணம் உடைந்த சூர்யா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News