என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "alcohol addict"
- குடிக்க தண்ணீர் கேட்டு துணிகரம்
- செல்போன் சிக்னல் மூலம் திருடனை மடக்கி பிடித்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் வசிப்பவர் நந்திராஜன் இவர் அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களுடன் தேங்காய் வெட்டி கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அடையாளம் தெரியாத நபர் குடிக்க தண்ணீர் கேட்டார்.
இதனால் நந்திராஜன் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். அதன் பிறகு மது போதை ஆசாமி போன பறகு தங்களிடத்தில் இருந்த செல்போன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து நந்திராஜன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் திருடிசென்ற செல்போன் சிக்னல் மூலம் திருடனை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் காட்டுநாயப்பள்ளி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என தெரியவந்தது.
திருப்பத்தூர் அடுத்த கட்டேரி பகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டுக்கு வந்துள்ளார். பைக்கில் சுற்றி திரிந்த பொழுது வெலக்கல் நத்தம் பகுதியில் குடிக்க தண்ணீர் கேட்டு சென்று போதையின் உச்சத்தில் அங்கிருந்த செல்போனை எடுத்துச் சென்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தனது சொத்துக்கள் முழுவதையும் இழந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
ராஜதானி அருகே உள்ள கே.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 43).
இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தனது சொத்துக்கள் முழுவதையும் விற்று பொறுப்பில்லாமல் சுற்றி வந்தார்.
மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில் தனிமையில் வசித்து வந்த பாண்டி மனம் வெறுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்