செய்திகள்

முத்திரையர்பாளையத்தில் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2018-03-03 17:05 GMT   |   Update On 2018-03-03 17:05 GMT
முத்திரையர் பாளையத்தில் குப்பை வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

புதுச்சேரி:

புதுவை அய்யங்குட்டி பாளையம் அமைதி நகரை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கீதா. இவர்களது மகன் செல்வகுமார் (வயது 25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை இவர் குரும்பாபேட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வழுதாவூர் சாலை வழியாக வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

முத்திரையர் பாளையத்தில் வந்த போது அந்த வழியாக வந்த குப்பை வண்டி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த செல்வகுமாரை அந்த வழியாக சென்ற வர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து புதுவை வடக்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ் பெக்டர் பிரபு, உதவி சப்- இன்ஸ்பெக்டர் தனசேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News