என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முத்திரையர்பாளையம்"
புதுச்சேரி:
புதுவை முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது43), ரியல் எஸ்டேட் புரோக்கர். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு இவர் புதுவைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
முத்திரையர்பாளையம் பஜனை மடத்துவீதியில் வந்த போது அங்கு குவித்து வைத்திருந்த ஜல்லிகற்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்தது. இதில் தலையில் உள்காயம் அடைந்த பார்த்தீபன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறாமல் வீட்டுக்கு வந்து விட்டார்.
மறுநாள் காலையில் வலியின் தாக்கம் அதிகமாகவே பார்த்தீபனை அவரது மனைவி முத்துலட்சுமி தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பார்த்தீபன் இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வடக்குபகுதி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்