செய்திகள்

புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு தாயுடன் வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-02-22 14:52 GMT   |   Update On 2018-02-22 14:52 GMT
புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு தாயுடன் வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

குஜராத்தை சேர்ந்தவர் நிலேஷ் கன்னாரா. தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் போயாஷா (வயது 19). எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரை வற்புறுத்தி வந்தார்.

ஆனால், பெற்றோர் அந்த பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் போயாஷா சோகத்துடன் இருந்து வந்தார்.

இதையடுத்து போயாஷாவின் மனநிலையை மாற்ற அவரது தாய் ரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு அழைத்து வந்தார்.

அவர்கள் சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஆசிரமத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்தனர். நேற்று ரித்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்றார். விடுதி அறையில் போயாஷா மட்டும் இருந்தார்.

ஆசிரமத்துக்கு சென்று விட்டு ரித்து விடுதி அறைக்கு வந்த போது, அங்கு மகன் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அங்குள்ள ஊழியர்கள் உதவியுடன் போயாஷாவை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் போயாஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் வெற்றிவேல், முருகன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் பஞ்சநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News