search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young men suicide"

    சங்கரன்கோவில் அருகே போலீஸ் தேடிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது25). இவர் மீது ராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் ராஜபாளையம் போலீசார் ரவுடிகளை கைது செய்யும் நோக்கில் பாக்கியராஜ் வீட்டிற்கு வந்து அவரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கூறியுள்ளனர். இதனால் பாக்கியராஜை அவரது பெற்றோர் சத்தம் போட்டுள்ளனர். 

    இதில் மனமுடைந்த பாக்கியராஜ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பால்ராஜ் புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×